தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் மொரப்பூர் காவல் துறை இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மொரப்பூர் கல்லாவி ரோட்டில் இருந்து மொரப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை நடத்தப்பட்டது .பொதுமக்களிடையே போதை விழிப்புணர்வு வாசகங்கள், பதாகைகள் கொண்டு போதையை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரணியில் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.