தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கல்வி உபகரணங்கள் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மாணவி ஹாசினி வரவேற்புரை வழங்கினார்.
பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பேனா, வாட்டர் கேன், ஸ்லேட் உள்ளிட்ட பல்வேறு வகையான எழுதுபொருள்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கல்வித் தேவைகளை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட இப்பொருட்கள், அவர்களின் கற்றல் செயல்பாடுகளுக்கு பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கியதன் மூலம், அவர்களின் கல்வி மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும், கற்றல் சூழலை மேம்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்ச்சி அமைந்தது.
நிகழ்ச்சியின் நிறைவில் மாணவி நந்தனா நன்றி கூறினார் இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் ஆர்த்தி, சிவரஞ்சனி, பாண்டிச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.