கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டம் மனோகரா ரவுண்டான பகுதியில், பட்டியலின விடுதலைப் பேரவை தமிழ்நாடு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 256ஆவது வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு அப்பேரவையின் நிறுவனத் தலைவர் தலித் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார்.
மாநில பொருளாளர் வழக்கறிஞர் தனபாலன், செயலாளர் பாண்டியன்,
மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாநில மகளிர் அணி செயலாளர் உமா மகேஸ்வரி பலர் கலந்துகொண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒண்டிவீரனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து,மலர் தூவி, வீரவணக்கம் செலுத்தினர்.