வீட்டின் பின்புறத்தில் தோட்டம் அமைத்து செடிகள் வளர்க்கும் அளவுக்கு இடவசதி தற்போது இல்லை. மாற்றாக வீட்டு மாடியில் காலியாக உள்ள இடங்களில் பாலத்தீன் பைகள், உடைந்த குடம், மண்தொட்டி ஆகியவற்றில் காய்கறி விதைகளை விதைத்து வளர்க்கலாம். செடிகள் வளர்க்க தொடங்குவதற்கு முன்பு பாலித்தீன் பைகளில் செம்மண், தென்னை நார்கழிவு, மண்புழு உரம் ஆகியவை அடங்கிய கலவையை நிரப்ப வேண்டும். தென்னை நார்கழிவு தண்ணீரை தக்க வைத்துக்கொள்ளும் தன்மை உடையது. மண்புழு உரம் செடிக்கு தேவையான சத்துக்களை கொடுக்கிறது.
இந்த கலவை அடங்கிய பாலித்தீன் பை மற்றும் மண் தொட்டிகளில் 2 அல்லது 3 விதைகளை வளர்க்கலாம். மாடித் தோட்டம் மூலம் வெண்டை, கத்தரி, புடலை, பாகற்காய், பீர்க்கங்காய் மற்றும் அழகு செடிகளையும் வளர்க்கலாம். மாடித்தோட்டம் அமைப்பதற்கான செலவும் மிகக்குறைவு தான். மாடித்தோட்டம் மூலம் விவசாயிகள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள முடியும். மீதமுள்ள காய்கறிகளை கடைகளில் விற்று பயன் பெறலாம். மாடித்தோட்டம் மூலம் விவசாயிகளின் சத்துக்கள் தேவை பூர்த்தி செய்யப்படுவதுடன் கூடுதல் வருமானமும் கிடைக்கும் என்றார்.