காரைக்கால்,செப்.10 – காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ‘மக்கள் மன்றம்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வாரம் 12.09.2026 சனிக்கிழமை அன்று காரைக்கால் நகர போக்குவரத்து காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காரைக்கால் வடக்கு காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும், நகர காவல் நிலையத்தில் காரைக்கால் தெற்கு காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும் காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது புகார்களை எழுத்துப்பூர்வமாக அளித்து தீர்வு காணும்படி மாவட்ட காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்