பெரியபாளையம் அருகே ஆரணியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை எஸ். ரோஸ் பொன்னையா ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆரணி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 12 பூக்கள் காண வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மற்றும் தொடக்கப்பள்ளியில் திமுகவின் பி எல் ஏ 2, பி எல் சி, பி டி ஏ, நிர்வாகிகள் ஈடுபட்டு வந்தனர். இப்பணி ஆரணி நகர செயலாளர் பி.முத்து தலைமையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறியாளரணி அமைப்பாளர் எஸ்.ரோஸ் பொன்னையன் ஆய்வு செய்தார்.
அப்போது பிஎல்ஓ கூறும் வழிமுறைகளை ஏற்று வாக்காளர் படிவங்களை குறித்த நேரத்தில் நிரப்பி ஒப்படைக்குமாறு திமுக பிஎல்ஏ2,பிஎல்சி,பிடிஏ நிர்வாகிகளை ஆரணி எஸ்.ரோஸ் பொன்னையன் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், ஆரணி பேரூர் அவை தலைவர் வழக்கறிஞர் ஜி.ரமேஷ், ஆரணி பேரூர் கழக பொருளாளர் கு.கரிகாலன்,நீலகண்டன், ஜெயக்குமார்,புதுநகர் பாலாஜி,சாலேக்,சுல்தான், நாகராஜ்,ஈஷாஜாவித், உதயகுமார்,உமாபதி, சந்தோஷ்பிரபா,கவியரசு, சுரேந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் சீனிவாசன்.