மணலி, எம்.எப்.எல்., ரவுண்டானாவில், எண்ணுார் போக்குவரத்து ஆய்வாளர் சந்திரமவுலி தலைமையிலான போலீசார், பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மாதவரம் விரைவு சாலையில் வந்த, குட்டியானை வாகன ஓட்டுனர், போலீசாரை பார்த்ததும், வாகனத்தை திருப்ப முயற்சித்துள்ளார்.
சந்தேகமடைந்த போலீசார், குட்டி யானை வாகனத்தை மடக்கி விசாரித்தனர். விசாரணையில், ஓட்டுனர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். தொடர்ந்து, வாகனத்தை திறந்து பார்த்த போது இரண்டு டன் எடையுள்ள ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், பிடிப்பட்ட நபர், வியாசர்பாடியை சேர்ந்த, அசன், 32, என்பதும், பெரம்பூரில் இருந்து, எர்ணாவூருக்கு ரேசன் அரிசியை ஏற்றிக் கொண்டு வந்தது தெரியவந்தது. அங்கு, யாரிடம் கொடுக்க வந்தார் என்பது தெரியவில்லை.
பிடிப்பட்ட அரிசி, வாகனம் மற்றும் அசனை, திருவள்ளூர் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரிடம், போக்குவரத்து போலீசார் ஒப்படைத்தனர்.