திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் பிஜெ.மூர்த்தி தலைமையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் பங்கேற்று பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே கழகக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து 1000 பேருக்கு இனிப்புடன் கூடிய அறுசுவை பிரியாணி வழங்கினார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஏவி. ராமமூர்த்தி, பாசே. குணசேகரன், மாவட்டத் துணைச் செயலாளர் கே.வி ஜி.உமா மகேஸ்வரி,மற்றும் அவைத்தலைவர் ரவிச்சந்திரன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாவட்ட அமைப்பாளர் விபி.ரவிக்குமார் மாவட்ட ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ஏ.சீனிவாசன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி,ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் இ.ராஜா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஐ.ராஜா, ஒன்றிய சிறுபான்மை நல அமைப்பாளர் எஸ்.அமிர், மற்றும் நிர்வாகிகள் ஜிடிஎம்.கார்த்திக், சம்பத், அசோகன்,முனுசாமி, சுப்பையா, ஏழுமலை. ஆகியோர் உட்பட திரளான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..
செய்தியாளர் சீனிவாசன்.