தென்காசி

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வரும் முத்துக்குமாரசாமி இன்று காலை செங்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு விவாதங்களை முடித்துக் கொண்டு அவரது அலுவலகம் அமைந்திருக்கும் தென்காசி நடு பல்க் அருகில் பேசிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் அவரது அலுவலகம் அருகிலேயே வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் காவல்துறை விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்காசியின் மையப் பகுதியான கூலக்கடை பஜார் என்பது மிகவும் பரபரப்பான பகுதியாகும் இப்பகுதியில் மாடியில் செங்கோட்டை அரசு வழக்கறிஞரான முத்துக்குமாரசாமி அலுவலகம் நடத்தி வருகிறார்

இந்நிலையில் இன்று மதியம் 12.30 மணி அளவில் தனது அலுவலகத்திற்கு வந்த நிலையில் அவரை எதிர்பார்த்து காத்திருந்த மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி படுகாயம் ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர் ரத்த வெள்ளத்தில் இருந்த வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியை தென்காசி காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

அங்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வரும் நிலையில் சம்பவம் குறித்து அறிந்த தென்காசி மாவட்ட வழக்கறிஞர்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் கொலை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தனி படைகள் அமைத்து கைது செய்ய உடனடி நடவடிக்கைவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்து உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்றும் இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியதை அடுத்து வழக்கறிஞர்கள் கலைந்து சென்றனர்

இந்நிலையில் பாதிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமிக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன இச்சம்பவம் நடைபெற்ற பகுதி தென்காசியின் மையப் பகுதி என்பதாலும் போக்குவரத்துகள் மிகுந்த பகுதி என்பதாலும் சிறிது பரபரப்பு ஏற்பட்டது .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *