அபிராமம் அருகே போலியாக பட்டா மாற்றி 200ஏக்கருக்கு மேல் மோசடி கிராமமக்கள் புகார்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா அபிராமம் அருகேயுள்ள சோடனேந்தல் கிராமத்தில் சிலர் போலி பட்டா தயாரித்து சுடுகாடு, விளைச்சல் நிலங்களை பதிவுசெய்து அபகரித்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சோடனேந்தல் கிராம மக்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் மனு அளித்தனர்.
இதில், சோடனேந்தல் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் பொது சுடுகாடு ஆகியவற்றை அரசு அதிகாரிகள் உடந்தையுடன் தனியார் பெயருக்கு போலியாக சுமார் 220 ஏக்கர் பட்டா மாற்றம் செய்துள்ளனர்.நாங்கள் பயிர்காப்பீடு செய்ய போகும்போது தான் தெரிந்தது ஆகவே இது தொடர்பாக மாவட்டகலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்து விவசாய நிலங்கள், பொது சுடுகாட்டை மீட்டுத்தர வேண்டும். போலி பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *