கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் மை கராத்தே இண்டர்நேஷனல் பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆறு தங்கம் உட்பட 23 பதக்கங்கள் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்..

கோவை மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே ஸ்கூல்ஸ் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே போட்டி கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் நடைபெற்றது.
ஆறு வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட இதில், வயது மற்றும் எடைப்பிரிவுகளில், கட்டா மற்றும் குமித்தே ஆகிய போட்டிகள் நடைபெற்றன..

மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர் இதில் மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளியில் பயிற்சி பெறும் மாணவ,மாணவிகள்,சுமார் நாற்பது பேர் கலந்து கொண்டு,6 தங்கம்,4 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என 23 பதக்கங்கள் வென்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்..

சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ள வீரர் வீராங்கனைகளுக்கு தலைமை பயிற்சியாளர் தியாகு நாகராஜ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள மை கராத்தே இண்டர்நேஷனல் பயிற்சி மையத்தில் நடைபெற்ற இதில், மையத்தின் நிறுவனர் தியாகு நாகராஜ் மற்றும் , துணை இயக்குனர், சிவமுருகன்,செயலாளர் விமல், உட்பட பயிற்சியாளர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *