சின்னக்காவனம் நெல்லூரம்மன் ஆலயம் மகா கும்பாபிஷேகம்.

திருவள்ளூர்

பொன்னேரி அருகே உள்ள சின்ன காவனம் நெல்லூரம்மன் ஆலயம் மகா கும்பாபிஷேகம் வெகு விமர் சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்ட னர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட சின்னக்காவனம் பகுதியில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ நெல்லூரம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் தற்போது பக்தர்கள் நிர்வாகிக ளால் புதுப்பிக்கப்பட்டு பல்வேறு சிறப்பு யாகங்கள் நடத்தி மகா கும் பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கல ந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம சீர்திருத்த வாலிபர் கழக சின்னக்கான பகுதியைச் சேர்ந்த தலைவர் பி மூர்த்தி, செயலாளர் எம்.வீரா, பொருளாளர் எஸ் பாரதி, துணைத் தலைவர் எஸ் தட்சணா மூர்த்தி, துணை செயலாளர் சி. தியாகராஜன், உள்ளிட்ட கலர் செய்திருந்தனர்.

கும்பாபிஷேகத்தின் போது பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *