வேப்பூர் நெடுஞ்சாலை ஹோட்டலில் திடீரென்று கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
வேப்பூர்
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ரோகினி கார்டன் பகுதியை சார்ந்தவர் கிருஷ்ணன் மகன்
விஸ்வநாதன் (வயது-55) இவர் ஜீலை 30.ந் தேதி தனது மனைவி சியாமளா, மகள் சாவித்திரி, மகன் ராகுல் கிருஷ்ணன் ஆகியோருடன் டிஎண், 11 டி 7150 என்ற எண்ணுள்ள ரெனால்ட் டஸ்டர் காரில் சென்னையில் இருந்து திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்
காரை ரமேஷ் என்ற டிரைவர் ஓட்டிக்கொண்டு வந்தார்
கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோட்டில் மதியம் 1.30 மணி அளவில் வேப்பூர் ஆர்யாஸ் ஹோட்டல் வெளியே டீ குடிப்பதற்காக காரை நிறுத்திய போது கார் இன்ஜினில் பகுதியில் இருந்து லேசாக புகை வந்துள்ளது உடனே காரில் இருந்து அனைவரும் இறங்கிவிட்டனர்
கார் இன்ஜினில்வெப்பம் அதிகமானதால் கார் தானே தீ பிடித்து மளமளவென்று எரிந்துள்ளதுஇது குறித்து தகவலறிந்த வேப்பூர் தீயணைப்புத் துறையினர் உடனே வந்து தீயை அணைத்தனர் உயிர் சேதம் ஏதுமில்லைஇது குறித்து வேப்பூர் போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்