தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கு பசுமைத்தாய்நாடு அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி இடையம்பட்டி பகுதியில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் நேற்று ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியின் கோப்பை அறிமுகம் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு பசுமை தாய்நாடு அறக்கட்டளை சார்பில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் 100 இழுப்பை மரக்கன்றுகளை வழங்கினார். அப்போது உடன் ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜி, மாவட்ட சேர்மன் சூரியகுமார், மாவட்ட ஆவின் தலைவர் எஸ் ராஜேந்திரன், பசுமை தாய்நாடு அறக்கட்டளை நிறுவனர் சத்தியராஜ் மற்றும் பசுமை தாய்நாடு அறக்கட்டளை நிர்வாகிகள் உடனிருந்தனர்..