ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
மணிப்பூர் மாநிலத்தில் தற்போது படிப்படியாக இயல்பு நிலை மற்றும் அமைதி நிலை முன்னாள் மத்திய அமைச்சர் ஜி கே வாசன் எம்பி திருவாரூரில் பேட்டி
திருவாரூரில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கும் விழா திருவாரூர் மன்னார்குடி சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண அரங்கில் நடைபெற்றது
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி கே வாசன் எம்பி செய்தியாளர் சந்திப்பின்போது அவர் தெரிவித்ததாவது மணிப்பூர் மாநிலத்தில் தற்போது படிப்படியாக இயல்பு நிலை மற்றும் அமைதி நிலை திரும்புகிறது மணிப்பூர் மாநிலம் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச தயாராக இருக்கும்போது நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் முடக்கி வருவது சரியானது அல்ல டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்கள் கருகத் துவங்கி உள்ளது
எனவே இதற்கு தேவையான நீரினை கருணா கர்நாடகா அரசிடம் இருந்து பெற்றுக் கொடுப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் நடைபெற்று வரும் தடுப்பணை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் மேகதாது அணை கட்டுமான பணியினை தடுத்து நிறுத்த வேண்டும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தேவையற்ற முறையில் விவசாய நிலங்களை அழித்து வருவது கண்டனத்துக்குரியது ஆகும் என தெரிவித்தார்