ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

தமிழகத்திற்கு முக்கியமானவர்கள் வரும்போதெல்லாம் மின்வெட்டு ஏற்படுகிறது தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் திருவாரூரில் பேட்டி

தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி மாநில துணை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் திருவாரூரில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அவர் பேசிக் கொண்டிருந்த திடீரென மின்வெட்டு ஏற்பட்டது உரையை முடித்துக் கொண்டார்

தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டதன் காரணமாக சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது செய்தியாளர்களை சந்தித்த மிளகு ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறைந்த நபர்களுக்கு அறிவித்துவிட்டு தற்பொழுது அதனை விரிவுபடுத்தி அதிக நபர்களுக்கு புதுச்சேரி மாநிலத்தில் அரசு கொடுக்க உள்ளது.

அதே நேரத்தில் தமிழகத்தில் அனைவருக்கும் என கூறிவிட்டு குறைவான நபர்களுக்கு வழங்குகிறார்கள்

தெலுங்கானாவில் முதலமைச்சர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றாலும் மக்களுக்காக நான் பணியாற்றுவேன்

தமிழகத்தில் 24 மணி நேரமும் மின்மிகை மாநிலம் என கூறிவரும் நிலையில் தமிழகத்தில் முக்கியமானவர்கள் வரும்பொழுது மின்வெட்டு ஏற்படுகிறது

திருவாரூரிலையே தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுகிறது மின்சார துறை அமைச்சருக்கு பிரச்சனை என்பதால் புதிய அமைச்சர் வந்ததன் காரணமாக மின்வெட்டு ஏற்படுகிறதா என தெரியவில்லை என மேதகு ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *