ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
கஸ்தூர்பாகாந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளருக்கு சிறந்த கல்வி தேவைக்கான விருது மேதகு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வழங்கினார்
திருவாரூர் மன்னார்குடி சாலையில் அமைந்துள்ள எம் .எம். ஏ நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் திருவாரூர் கஸ்தூரிபா காந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளரும் முடிகொண்டான் ஒருங்கிணைந்த அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியின் செயலருமான டாக்டர். சந்திரா முருகப்பன் அவர்களுக்கு சிறந்த கல்வி சேவைக்கான விருது வழங்கப்பட்டது .
விருதினை மேதகு தெலுங்கானா ஆளுநரும் பாண்டிச்சேரியில் துணை நிலை ஆளுநருமான டாக்டர். தமிழிசை சௌந்தர்ராஜன் வழங்கினார்கள் நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர் ஜி. கே. வாசன் தலைமை வகித்தார் . முன்னாள் அமைச்சர் நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இரா. காமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருது பெற்றவர்களை பாராட்டினார்கள் நிகழ்ச்சியினை எம். எம் .ஏ நிறுவனத்தின் எம் தலைவர் செல்வராஜன் மிக சிறப்பாக செய்திருந்தார்கள் திருவாரூர் கஸ்தூர்பா காந்தி கல்வி நிறுவனம் சார்பில் டாக்டர் .செ.திவ்யா அவர்களுக்கும் டாக்டர்.சௌ. சுகநாதன் அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
விழா நிகழ்வில் தாமாக மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார் மாநில மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர் டாக்டர் கோவை சுகநாதன் திருவாரூர் மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன் கோவை மாவட்ட தலைவர் வி வி வாசன் திருச்சி மாவட்ட தலைவர் குணா மாநில செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் மணக்கால் ராமகிருஷ்ணன் அண்ணா திமுக கழக அமைப்பு செயலாளர் முன்னாள் நகர மன்ற தலைவர் சிவா ராஜமாணிக்கம் பாஜக மேலிட பார்வையாளர் பேட்டை சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்