வலங்கைமான் அருகே ரூ. 25 லட்சம் செலவில் துணை சுகாதார நிலையம் கட்டும் பணி
வலங்கைமான் அருகே உள்ள வேலங்குடி ஊராட்சி வடகரை ஆலத்தூரில் ரூ. 25 லட்சம்மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைப்பெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்டியூர், முனியூர், ஏரிவேலூர், உத்தமதானபுரம்
ஆகிய பகுதிகளில் முன்னதாக துணை சுகாதார நிலையத்திற்
கான கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போதுதிருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின்கட்டுப்பாட்டின் கீழ் வேலங்குடி ஊராட்சிவடகரை ஆலத்தூரில்வீர மங்கலம்,
வடகரை ஆலத்தூர், தென்கரை ஆலத்தூர் ஆகிய பகுதிகளைச்
சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் விதமாக துணை சுகாதார நிலையம் அமைத்திட திட்டமிடப்பட்டது.
அதனை அடுத்து ரூ. 25லட்சம் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையின் மூலம் துணை சுகாதார நிலையம், புறநோயாளிகள் பிரிவு மற்றும் செவிலியர் தங்கும் விடுதியுடன்கட்டுவதற்கு பூமி பூஜைநடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சி வலங்கைமான்திமுக மேற்கு ஒன்றிய செயலாளரும்,ஒன்றிய க்குழ உறுப்பினருமான
வீ. அன்பரசன் தலமையில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் வேலங்குடி ஊராட்சி மன்ற தலைவர்
நடராஜன், திமுக நிர்வாகிகள் கல்யாணம்,பரமசிவம், அசோக்குமார், ரமேஷ்குமார், சுகாதார ஆய்வாளர் விஜய் மற்றும் பொதுப்பணி த்துறை சுகாதாரத் துறை
சார்ந்த அலுவலர்கள்,வேலங்குடி ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள்உள்ளிட்ட பலரும் கலந்து
கொண்டனர்.