எஸ்.செல்வகுமார் செய்தியாளர்
சீர்காழி அருகே நான்கு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் பணியை தடுத்து நிறுத்தி போராட்டம்
விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் மாவட்டம் வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் இருந்து தரங்கம்பாடி வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக சீர்காழி தாலுக்கா பகுதியைச் சேர்ந்த 9 ஊராட்சிகளில் ஐந்தாயிரம் ஏக்கருக்கு மேல் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கையகப்படுத்தப்பட்ட இடங்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்காமல் பணிகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டிய பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் சீர்காழி புறவழிச் சாலையில் இன்று பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது நான்கு வழிச்சாலை பணிக்காக மண் ஏற்றி வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி சிறை பிடித்து உரிய இழப்பீடு வழங்க கோரி கோஷங்களை எழுப்பினர்.
இதனால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்த சீர்காழி காவல்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் நான்கு வழி சாலை விரிவாக்க பணி அதிகாரிகள் குழுவினரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.