மணப்பாறையை அடுத்த வையம்பட்டி காவல் சரகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். காந்திநகா் பகுதியில் முருகேசன் என்பவா் நடத்தி வந்த பெட்டிக்கடையில் இரண்டரை கிலோ புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு இருந்ததை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து முருகேசனை கைது செய்து வெள்ளிக்கிழமை இரவு நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி சிறையிலடைத்தனா்.
மண்ணை
க. மாரிமுத்து.