தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டுகள் நூலக அரங்கில் அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் கல்வி சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்
இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட அம்பி வெங்கிடசாமி நாயுடு மக்கள் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 1952 பயனாளிகளுக்கு ரூபாய் 11.38. கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் முன்னிலையில் வழங்கினார்கள்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார் தேனி நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணு பிரியா பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்