மதுரை கே.புதூர் பஸ் நிலையம் அருகில் எஸ்.டி.பி்.ஐ மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வடக்கு மாவட்ட தலைவர்
பிலால்தீன் தலைமை தாங்கினார்.,வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் பக்ருதீன்வரவேற்று பேசினார் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர்
சாகுல் ஹமீது, எஸ்.டி.பி.ஐ தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர் ஷபீக் அஹமது,மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் வழக்கறிஞர் ஹென்றி திபேன்,வி.சி.க மாநில துணை பொதுச் செயலாளர் வெ. கனியமுதன்,மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோர் பேசினர்.
எஸ்.டி.பி.ஐ மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்பு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் இறுதியில் எஸ்.டி.பி.ஐ வடக்கு மாவட்ட துணை தலைவர் எம் ஜாஃபர் சுல்தான் நன்றி கூறினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் உள்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.