சீர்காழி அருகே திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் அகோரமூர்த்தி சுவாமிக்கு கார்த்திகை 3-வது ஞாயிறு சிறப்பு வழிபாடு .தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்து பிரகார உலா வந்து வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிர்ம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் நவகிரகங்களில் புதன் ஸ்தலமாக விளங்கி வருகிறது. இங்கு சிவபெருமானின் அம்சமான அகோரமூர்த்தி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

அகோர மூர்த்தி சுவாமிக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதில் கார்த்திகை மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வாய்ந்தது. இத்திருநாளில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அகோர மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

இத்தகைய சிறப்புமிக்க அகோர மூர்த்தி சுவாமி திருநாளான கோவிலுக்கு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சூரிய தீர்த்தத்தில் இருந்து பால்குடம் எடுத்து கோவிலை வலம் வந்து அகோர மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்தார் தொடர்ந்து துர்கா ஸ்டாலின் சுவாமி அம்பாள் மற்றும் புதன் பகவான் சன்னதிகளுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இதனை அடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூரிய தீர்த்தத்தில் இருந்து பால்குடம் எடுத்து வந்து அகோர மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *