வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் புதிய வெள்ளிக்குதிரை வாகனம் வெள்ளோட்ட விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் விஜயதசமி விழாவை ஒட்டி, காலை 7:45 மணிக்கு மேல் 8 .45 மணிக்குள் ஸ்ரீ அம்பாளுக்கு கணபதி ஹோமம்,சக்தி ஹோமமும் நடைபெற்று, பகல் 11 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், பகல் 12 மணிக்கு உபயதாரர்கள் திப்பிராஜபுரம் ஸ்ரீ நாராயணி நிதி லிமிடெட் நிறுவனர் எஸ். கார்த்திகேயன், கரூர் சுகன்யா சிவமணி ஆகியோரால் வழங்கப்பட்ட புதிய வெள்ளிக் குதிரை வாகனம் வெள்ளோட்டம் நடைபெற்று,மாலை ஐந்து மணிக்கு ஸ்ரீ அம்பாள் புதிய வெள்ளிக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு அம்பு போடுதல் நிகழ்ச்சிக்கு வீதி உலா காட்சி சென்றது.

விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் ஆ. ரமேஷ், தக்கார் /ஆய்வர் எஸ்.தமிழ்மணி, அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள், ஆலய முன்னால் தலைமை அர்ச்சகர் இரா செல்வம் பூசாரியார் உட்பட சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *