பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் கடலை வியாபாரி மயங்கி விழுந்து சாவு ….
தஞ்சாவூர் மாவட்டம்
பாபநாசம் அருகே வங்காரம்பேட்டை எம்ஜிஆர் நகரில் வசித்து வந்தவர் வன்னியப்பன் வயது 65 கடலை வியாபாரி சம்பவத்தன்று திடீரென்று மயங்கி விழுந்து விட்டார்.
உடனே சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் .
இது குறித்து அவரது உறவினரான மதுரையை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி ,சப் – இன்ஸ்பெக்டர் குமார் , ஏட்டு செல்வமணி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இறந்த வன்னியப்பன் நீண்ட நாட்களாக தனியாக வசித்து வந்ததால்
பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் கிராம மக்கள் உதவியுடன் போலீசார்கள் மாலை அணிவித்து நல்லடக்கம் செய்யப்பட்டது .