மதுரையில் புனித யூதா ததேயு திருத்தல திருவிழா….

மதுரை திருநகரில் அமைந்துள்ள புனித யூதா ததேயு திருத்தல திருவிழாவானது பங்குத்தந்தை அருட்பணி ஜார்ஜ் எட்வின் அடிகளார் தலைமையில்
கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாவது நாளன்று
புனிதரின் திருத்தேர் பவனி திரளான பக்தர்களுடன் நடைபெற்றது.

மூன்றாம் நாள் ஆடம்பர திருப்பலி மற்றும் கொடியிறக்கத்துடன் திருவிழாவானது நேற்று நிறைவு பெற்றது.

மூன்று நாட்கள் நடைபெற்ற திருவிழா திருப்பலியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறையாசீர் பெற்றனர் புனித யூதா ததேயுவின் நவநாள் திருப்பலியானது ஒவ்வொரு வாரமும் வியாழன்று நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *