வலங்கைமானின் பட்டாசுகள் வெடித்து திடீர் தீ விபத்து ரூபாய் 10 லட்சம் மதிப்பு வெடிகள் சேதம்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கீழத் தெருவை சேர்ந்தவர் செந்தில், இவர் தனது வீட்டின் முன்புறத்தில் பட்டாசு கடை நடத்தி வருகிறார்,வீட்டில் பட்டாசுகளை இருப்பு வைத்து வியாபாரம் செய்து வருகிறார், இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் வீட்டில் இருந்த பட்டாசுகளில் தீப்பிடித்தது, இதையடுத்து பட்டாசுகள் பலத்த சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கின, தகவல் அறிந்து வலங்கைமான் மற்றும் குடவாசல் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்,

இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீயணைக்கப்பட்டது. இந்த விபத்தில் சுமார் ரூபாய்10 லட்சம் மதிப்பு பட்டாசுகள் வெடித்து சாம்பலாயின, இந்த விபத்து குறித்து வலங்கைமான் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் நேற்று(30- ந் தேதி) இரவு பரபரப்பும், பதட்டமும் நிலவியது. வலங்கைமான்பகுதியில் 12 இடங்களில் பட்டாசு தயாரிக்கப்படுகிறது, 28 கடைகளில் பட்டாசுகள் விற்பனைசெய்யப்பட்டு வருவதுகுறிப்பிடத் தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *