திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள் நலன் துறையின் சார்பில் நடத்தப்பட்ட முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது நடைபெற்ற குறைதீர்க்கும் நாள்கூட்டத்தில் வீட்டுமனை பட்டா பட்டா மாற்றுதல் நில அளவீடுதல் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன 15 மனுக்கள் பெறப்பட்டது மேலும் கூட்டத்தில் 23 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் பங்கேற்றனர்
அதனை தொடர்ந்து கண் கண்ணாடிக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு 1500 தொகுப்பு நிதி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு 50,000 மற்றொரு பயனாளிக்கு 10,000. என 61,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் பயனாளி ஒருவருக்கு இலவச வீட்டுமனை பட்டாவினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
கூட்டத்தில் உதவி இயக்குனர் முன்னாள் படைவீரர் நலன் மதியழகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *