சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.
இதில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் மதியம் 2.30 வரை நீடித்தது. இந்த உலகத்திற்கு உணவு வழங்கும் விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கு அரசு அமைக்கப்பட்ட இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க வந்த சுமார் 200 விவசாயிகளின் பசியை போக்கும் விதமாக, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி சைவ உணவு வழங்கினார். இதனை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு உணவருந்தினர்.
பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் விவசாய குறை தீர்க்கும் கூட்டத்தில் கடந்த சில மாதங்களாக சிவகங்கை, மானாமதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கி வந்த நிலையில் இன்று காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி உணவு வழங்கியுள்ளார்.