சென்னை திருவொற்றியூரில் இயங்கி வரும் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு பதினோராம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
நிகழ்ச்சியில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் கல்விக்கான நலத்திட்டங்கள் குறித்தும் மேலும் உயர் கல்வி படிப்பதற்கான திட்டங்கள் குறித்தும் அறிவுரை வழங்கி பின்னர் மாணவர் -134 பேருக்கும் அதே போன்று மாணவி-153 பேருக்கும் மொத்தம்- 287 இந்த ஆண்டு மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி கல்வித்துறை அலுவலர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்