பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
விழுப்புரம் வடக்கு மாவட்டம் ஒலக்கூர் மேற்கு மண்டல் பாஞ்சாலம் சார்ந்த மோகன்ராஜ், சங்கர், ஜெயக்குமார், மணிகண்டன், தனசேகர், பெருமாள், ராஜேந்திரன், அலமேலு, செல்வி, தெய்வானை, சீத்தா, கார்த்தி, வளர்மதி, விமலா, தாமோதரன் ஆகியோர் அமமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் இருந்து விலகி பாஜக விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் A.D. இராஜேந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர் சந்திரலேகா பிரபாகரன் வழிகாட்டுதலின் படி ஒலக்கூர் மேற்கு மண்டல் பிரபாரி ராஜ்குமார் மண்டல் தலைவர் ராமு ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியின் போது இளைஞர் அணி மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மயிலம் மேற்கு மண்டல் தலைவர் பிரசன்ன ராம், ஆன்மீகபிரிவு மாவட்ட துணை தலைவர் தருமன் உட்பட பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர். பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினருக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் சால்வை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.