விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கூட்டே ரிப்பட்டு பகுதியில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தின் சுவர் மீது பல அரசியல் கட்சியினர் விளம்பர போஸ் டர்களை ஒட்டி வைத்துள்ளனர்.
இதில் பாஜக சார்பில் நல்லாமூர் கிளைக் கழக தலைவர் அழகரசன் கிளை கமிட்டி உறுப்பினர்களான கவியரசன்,வேலு சார்பில் என் மண், என் மக்கள் பாதயாத்திரைக்கு வரும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்று விளம்பர போஸ்டரை ஓட்டியுள்ளனர். அதை மர்மநபர்கள் கிழித்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலம் கிழக்கு பா.ஜனதா மண்டல தலைவர் அசோகன் தலை மையில் பா.ஜனதாவினர் மயி லம் போலீஸ் நிலையத்தில் த புகார் அளித்துள்ளனர்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சந்திரலேகா விஜயன். அ பொதுச்செயலாளர்கள் குப்பன், சக்திவேல் , மண்டல பொருளாளர் செந்தில்குமார், ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் தர்மன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு ஒன்றிய செயலாளர் மோகன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு ஒன்றிய செயலாளர் லட்சுமணன் உள்பட பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.