வலங்கைமான் அருகே உள்ள கோவிந்தகுடி ஊராட்சியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து பத்தாண்டு கால பிரச்சனைக்கு தீர்வு.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கோவிந்தகுடி ஊராட்சி தெற்கு தெருவில் கடந்த 10 வருட காலமாக மின்சாரப் பிரச்சனை இருந்து வந்தது, ஊராட்சி மன்ற தலைவர் ஆக வக்கீல்மணிகண்டன் பொறுப்பேற்ற பிறகு, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பல போராட்டத்திற்குப் பிறகு, கோவிந்தகுடி ஊராட்சி தெற்கு தெருவில் 63 கே வி ஏ கொண்ட புதிய மின் மின்மாற்றி அமைக்கப்பட்டது.
இம் மின் மாற்றி அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுத்த மின்துறை செயற்பொறியாளர் அருள்ராஜ், வலங்கைமான் உதவி மின் பொறியாளர் அகஸ்தியா அவர்களுக்கும், பணிபுரிந்து ஒத்துழைப்பு நல்கிய மின்துறை ஊழியர்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர், பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.