போச்சம்பள்ளி அருகே எம்.ஜி. ஹள்ளி சமுதாய கூடத்தில் விஜயகாந்தின் நினைவாக 500 பேருக்கு அன்னதானம்
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாதேவகொல்ல ஹள்ளி ஊராட்சி மகாதேவ கொல்லஹள்ளி மற்றும் முல்லை நகரில் தேமுதிக கழகப் பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்தின் நினைவாக ஊர் பொதுமக்கள் சார்பாக பசி என்று வந்தோர்க்கு பசியை போக்கிய வள்ளல் கேப்டன் விஜயகாந்தின் நினைவாக 500 பேருக்கு அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விஜயகாந்தின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்களின் அழைப்பை ஏற்று ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர் மற்றும் ஊர் முக்கிய பெருமகர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து 500 பேருக்கு அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.