கும்பகோணம்:ஐயப்ப பக்தர்களுக்காக சிறப்பு தரிசனப் பாதை அமைக்கப்பட வேண்டும்: சிவசேனா கட்சி சார்பாக மாநிலத் துணைத் தலைவர் எஸ் பூக்கடை ஆனந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
பின்னர் தொடர்ந்து பேசியதாவது:தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் ஐயப்ப பக்தர்கள் அதிகமாக தரிசனத்திற்கு குவிந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை உடனடியாக இந்து சமய அறநிலை துறைக்கு உட்பட்ட அனைத்து ஆலயங்களிலும் ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு தரிசன பாதை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன் குறிப்பாக லட்சக்கணக்கான பக்தர்கள் குமியும் திருச்செந்தூர் மற்றும் பழனி ஆலயங்களில் ஐயப்ப பக்தர்கள் அதிகமாக கூடும் சூழல் ஏற்பட்டுள்ளது
அதனால் பொதுமக்கள் மிகுந்த கால தாமதமாக சுவாமி தரிசனம் செய்யும் அவலம் நடைபெற்று வருகிறது இதனை பொற்கால அடிப்படையில் தமிழக அரசு கவனம் செலுத்துமாறு சிவசேனா கட்சியின் சார்பாக முன் வைக்கிறோம் என்றார்