இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி திருக்கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு, திருவிழா நாட்களில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவதை கருத்தில்கொண்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .G.சந்தீஷ்,, நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எவ்வித இடையூறும் இன்றி திருவிழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்யும் வகையில், போக்குவரத்து காவலர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் அலுவலர்கள் அனைவரும் முழு விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என தகுந்த அறிவுரைகளையும் வழங்கினார்