பெரம்பலூர்.டிச.22. பெரம்பலூர் மாவட்ட வனத்துறையின் சார்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி  நடைபெற்றது மாவட்ட விளையாட்டு மைதானத்தில்  மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி மரக்கன்றுகளை நட்டு பணிகளை தொடங்கி வைத்தார். 

பெரம்பலூர் மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்க திட்டத்தை செயல்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட பசுமைக்குழு உருவாக்கப்பட்டு வனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, உழவர்நலன் மற்றும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலமாக மரக்கன்றுகளை நடவு செய்து பெரம்பலூர் மாவட்ட வனப் பரப்பை அதிகரிக்க திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.    


              அதனடிப்படையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வலிமையான சமூகமாக மாற மரக்கன்று நட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பசுமை தமிழ்நாடு இயக்ககம் மூலம் 2000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் குறைந்த பட்சம் 55 மரக்கன்றுகள் தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தனியார் நிறுவனங்களான கோத்தாரி இண்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் கம்பெனி பங்களிப்புடன் நாவல், பாதாம், அத்தி, நீர்மருது உள்ளிட்ட 55 எண்ணிக்கையிலான மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நடவு செய்தார்கள்.   

இந்நிகழ்வில், மாவட்ட வன அலுவலர் சக்திவேல்,வனச்சரக அலுவலர்கள், சங்கரேஸ்வரி, பழனி குமரன் உள்ளிட்ட வன அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *