திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் மாணிக்க மங்கலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 மரக்கன்றுகள் நடும் பணியினை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

மாணிக்க மங்கலம் ஊராட்சி 56. ரெகுநாதபுரம் கீழ சேதுராயன் நத்தம் கிராமத்தில் 24 பயனாளிகளுக்கு இ-பட்டா ஆணையினை கலெக்டர் பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட இயக்குனர் பல்லவி வர்மா, மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, வலங்கைமான் வட்டாட்சியர் ஓம் சிவகுமாரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமணி, முரளி, மண்டல அலுவலர் ஸ்ரீ கணேஷ், வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்க மங்கலம் கோ.தெட்சிணாமூர்த்தி, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *