துறையூர் நவ-01
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் இரண்டாவது கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 13 முதல் 24 வது வார்டுகளில் “வார்டு சிறப்பு கூட்டம்” நடைபெறுவதாக நகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து 28/10/2025 அன்று துறையூர் நகராட்சி 19 வது வார்டில் நகர மன்ற உறுப்பினர் ஜானகிராமன் தலைமையில் கிளை நூலக கூட்டரங்கில் “வார்டு சிறப்பு கூட்டம்” நடைபெற்றது.
இதில் நகராட்சி மேற்பார்வையாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.இதில் வார்டுக்கு உட்பட்ட தெருக்களில் கழிவு நீர் கால்வாய், சாலையை மேம்படுத்தவும், காவிரி குடிநீர் மேம்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றிற்கு மக்கள் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து தீர்மானத்தில் ஏற்றப்பட்டது.
இதில் நகராட்சி சௌமியா பிரபு, கோவிந்தராஜ் ,தமிழரசன் மற்றும் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்