துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் இரண்டாவது கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 13 முதல் 24 வது வார்டுகளில் வார்டு சிறப்பு கூட்டம் நடைபெறுவதாக நகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து 28/10/2025 அன்று துறையூர் நகராட்சி 22வது வார்டில் ஸ்ரீமாரியம்மன் கோவில் முன்புறம் நகர் மன்ற உறுப்பினர் வீர மணிகண்டன் தலைமையில் வார்டு சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் 22 வது வார்டுக்கு உட்பட்ட தெருக்களில் கழிவு நீர் கால்வாய், சாலையை மேம்படுத்துதல், காவிரி குடிநீர் மேம்படுத்துதல், ஆகியவற்றிற்கு பொது மக்கள் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து தீர்மானத்தில் ஏற்றப்பட்டது. இதில் கோவிந்தராஜ் , சௌமியா பிரபு, தூய்மை காவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *