ஸ்ரீபெரும்புதூரில் விளைநிலத்தில் கடும் தீ விபத்து, தீயணைப்பு வாகனம் பழுதடைந்ததால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் அவதி
அருகே குடிசை வீடுகள் இருப்பதால் மக்கள் அச்சம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு பகுதியின் பின்புறம் பல வருடங்களாக விவசாயம் செய்து வந்த 10 ஏக்கர் நிலம் உள்ளது
கடந்த சில மாதங்களாக பராமரிப்பு இன்றி இருந்து வரும் சூழலில் அந்த விளைநிலம் முட்செடிகள் வளர்ந்து காட்டுப் பகுதியாக மாறி உள்ளது
இந்த நிலையில் இன்று மாலை முட்செடிகள் மீது படர்ந்த தீப்பொறி தொடர் காற்று வீச்சின் காரணமாக மலமலவென கடும் காட்டு தீ யாக மாறி உள்ளது
மேலும் இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்து விரைந்து வந்து தீயணைப்பு துறையினரின் வாகனம் பழுதடைந்ததால் தீயணைப்பு வீரர்கள் பன ஓலையை பயன்படுத்தி தீயை அணைக்க போராடி வருகின்றனர்
மேலும் இந்த கச்சிப்பட்டு பகுதியில் குடிசை வீடுகள் அதிகம் உள்ளதால் தீ பரவி குடிசை எரிந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்