ரோட்டில் ஆதரவற்று கிடந்த பெரியவரை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்த மாவட்ட வருவாய் அலுவலர்;-

திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில்
இரவு 8.09க்கு வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த பாளையாங் கோட்டை மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி பின்புறம் வெங்கடேஷ்வரா மருத்துவமனை எதிரில் பெரியவர் ஒருவர் அசைவு ஏதும் இல்லாமல் கிட்டப்பதாகவும் உடனே பெரியவரை மீட்க வேண்டும் நான் அங்குதான் நிற்கிறேன் உடனே வரவும் என ஆர் ஜோயா அறக்கட்டளைக்கு போன் செய்துள்ளார்
உடனே ஆர் ஜேயா அறக்கட்டளை குழுவினர் சமூகப் பணியாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் சம்மந்தபட்ட இடத்திற்கு விரைந்து சென்று பெரியவரை தூக்கி உட்கார வைத்து தண்ணீர் அருந்தவைத்து பேச்சு கொடுத்தார். பெரியவர் பேசிய பிறகு தான் மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட அங்கிருந்த அனைவருக்கும் நிம்மதி வந்தது.

அதனையெடுத்து காவல்துறையினரும் 108 ஆம்புலன்ஸ்சும் வர வைத்து பெரியவரை ஏற்றி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்
பெரியவரை 108 -ல் ஏற்றி அனுப்பும் வரை (சுமார் 1/2 நேரம் வரை) மாவட்ட வருவாய் அலுவலர் அதே இடத்தில் காத்திருந்தது ஆதரவற்ற மக்கள் மீது அவர் கொண்டுள்ள மனிதநேயத்தை செயலுக்காக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாரட்டி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *