கழுகுமலை சுற்றுலா மலையில் உள்ள சமணர் சிற்பங்கள் முன்பு மழை வளம் வேண்டியும், விவசாயங்கள் செழிக்கவும், உலக மக்களின் நலனுக்காகவும் கோவில்பட்டியை சேர்ந்த தனியார் பள்ளியில் படிக்கும் 5 ம் வகுப்பு மாணவி ரவீணா யோகாசனம் மற்றும் தியானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கழுகுமலை சப் இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமை தாங்கினார்.

கழுகுமலை தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் ( போக்குவரத்து) மலையாண்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

மாணவியின் பெற்றோர் விஜயன் – ரம்யா அனைவரையும் வரவேற்றனர். தொடர்ந்து மாணவி ரவீணா மழை வளம் வேண்டி பத்மாசனம் உள்ளிட்ட 20 வகையான யோகாசனங்கள் மற்றும் தியானம் செய்தார்.‌ தொடர்ந்து மாணவியை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் பாராட்டினர். நிகழ்ச்சியில் கழுகுமலை தீயணைப்பு மீட்பு குழு சார்பில் ஜெகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *