கீழப்பாவூரில் பேரூர் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் திறந்து வைத்தார்

தென்காசி, ஏப்.- 30

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தலை அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் திறந்து வைத்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி உத்தரவின் பேரில், கீழப்பாவூரில் பேரூர் அதிமுக சார்பில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கீழப்பாவூர் சென்ட்ரல் பேங்க் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார்.

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ். செல்வமோகன் தாஸ்பாண்டியன், முன்னாள் எம்.பி.யும், மாவட்ட ஜெ.பேரவை செயலாளருமான பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள், குளிர்பானங்களை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் தீப்பொறி அப்பாத்துரை, மதியழகன், ஒன்றிய கவுன்சிலர் சரவணன், கவுன்சிலர் பவானி, காளிமுத்து வேலு செட்டியார் விவேகானந்தர் ராமச்சந்திரன், கிருஷ்ணமுர்த்தி, கணேசன், அன்பரசு, செல்வராஜ், சாமி நாடார்,செல்லச்சாமி, பொன்னுத்துரை, சுந்தர்ராஜ், சாமி சிவகாமிபுரம் முருகன், மாரியப்பன், கஸ்தூரி, வார்டு செயலாளர்கள் வேல்சாமி. தமிழ் செல்வன் . முத்துராஜ், கருப்பையா , வேல் செட்டியார், கோபால் செட்டியார், தங்கராஜ், வெட்டும் பெருமாள், ராஜ், கருப்பசாமி, சுப்பிரமணி, ஆறுமுக நயினார், சமுத்திரலிங்கம்,சுந்தரராஜ், ஆறுமுகபாண்டி , மாயாண்டி, சந்தன முத்து, கோபால், முருகன் விஜயராம ஆனந்த், பெரிய சாமி, துரைசாமி, மாரியப்பன் மேகராஜன், பாசறை பாஸ்கர், சேகர்,அருணாசலம் தினேஷ், கோட்டைச் சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பேரூர் செயலாளர் ஜெயராமன் செய்திருந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *