ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலவை அடுத்து ஆயிரமங்களம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அங்கன்வாடி மையத்தில்கற்றல் திறமையைபரி சோதித்த மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி.

அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ரூ39.95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி செயலக கட்டிட பணிகளை மற்றும் ஆதிதிராவிடர் நல காலணியில் உள்ள மகளிர் சுய உதவி குழு கட்டிடம் பழுதடைந்துள்ளதை அகற்றி விடுவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு ஆய்வு செய்தார்.

மேலும் திமிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாந்தாங்கள் முதல் லாடாவரம் வரை 1கிலோ மீட்டர் தூரம் வரை போடப்பட்ட ரூபாய் 53.53 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலையின் தரத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிகழ்வின் போது திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் லோகநாயகி செயற்பொறியாளர் ராஜவேலு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன் சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *