ராஜபாளையம் பகுதியில் மதிமுக 31 ஆம் ஆண்டு தொடக்க விழா! கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கப்பட்டது!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு ஒன்றிய மதிமுக சார்பில் அதிமுக 31 ஆம் ஆண்டு தொடக்க விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயசங்கர் தலைமையில் மேற்கு மாவட்ட செயலாளர் பா வேல்முருகன் கொடியேற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
ராஜபாளையம் ஒன்றியம் சோலைசேரி கிருஷ்ணாபுரம் செட்டியார்பட்டி தளவாய்புரம் சேத்தூர் போன்ற பகுதிகளில் வெளியேற்றி வைத்து இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் எஸ். காதர் மைதீன், ரெட்டியார்பட்டி செயலாளர் நாகப்பன் சேர்த்து செயலாளர் அய்யணப்பன், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.