கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிக்கு வருகை தரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் 07.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை இ-பாஸ்(ePass) பதிவு செய்து வர வேண்டும் என மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வருகை புரியும் அனைத்து வாகனங்களுக்கும் ‘epass.tnega.org” என்ற இணைய முகவரி மூலம் 06.05.2024 முதல் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 06.05.2024 அன்று இரவு 8.00 மணி நிலவரப்படி, 15,945 வாகனங்கள் வேறுவேறு தேதிகளில் கொடைக்கானல் வருவதற்காக விண்ணப்பித்து இபாஸ் பெற்றுள்ளனர். இதன்மூலம் 3,61,919 பயணிகள் வருகை தரவுள்ளனர்.
07.05.2024 அன்று மட்டும் கொடைக்கானலுக்கு வருகை புரிய 3,792 வாகனங்களுக்கு இபாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 28,168 பயணிகள் வருகை தரவுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *