தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனையில் அரசு மருத்துவமனை மற்றும் இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் உலக செவிலியர் தின விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில் சேகர், டாக்டர் கிருஷ்ணவேணி, செவிலியர்கள் விஜயலட்சுமி, தங்கம்,
இந்திய ரெட் கிராஸ் சொசைட்டியை சார்ந்த துணை தலைவர் சண்முகம், செயலாளர் வழக்கறிஞர் சதீஷ், நிர்வாக குழு உறுப்பினர்கள் திலகவதி, ஜெயச்சந்திரன், ராஜேந்திரன், அருந்தமிழ்ச் செல்வன், சாரதி, ராம் அறக்கட்டளை நிறுவனர் பிஜிபி ராமநாதன், சமூக ஆர்வலர்கள் கார்த்திக், காவல் கிளி, பிரகாஷ், வீரமணி, சதீஷ்குமார் சுற்றுச்சூழல் அணி சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது சிறந்த செவிலியர் விருது பெற்ற மகாதேவியால் மரக்கன்று நடப்பட்டது.
சங்கரன்கோவில் அரவிந்த் கண் மருத்துவமனை சார்ந்த செவிலியர் சங்கீதாவிற்கு சிறந்த செவிலியருக்கான விருதும் வழங்கப்பட்டது.