தென்காசி மாவட்டம்
ஊத்துமலை வளர்ச்சி குழுவின் சார்பில் ஆலோசனை கூட்டம் குழுவின் தலைவர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

வளர்ச்சி குழுவின் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், செயலாளர் சரவணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துணைத் தலைவர் ஷயின்ஜா விஜயராணி, வரவேற்புரை வழங்கினர்.

கூட்டத்தில் ஊத்துமலையில் நிறுத்தப்பட்ட
பேருந்துகளை உடனடியாக இயக்க வலியுறுத்தியும் விவாசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க கோரியும் பொதுமக்களுக்கு குடி தண்ணீர் சீரான முறையில் வழங்கிட கோரியும் வருகின்ற 26 5 2024 அன்று காலை 11 மணியளவில் ஊத்துமலை வளர்ச்சி குழுவின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் கருப்பசாமி, உச்சிமாகாளி, வீரய்யா, வெங்கடேஸ் வரன், வெள்ளைச் சாமி ஆகியோர் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *