வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்
ஏ.முத்துசாராதா மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், உலக சுற்றுச்சூழல் தின விழா, முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் ஏ.முத்துசாராதா தலைமையில் இன்று(05.06.2024) நடைபெற்றது.
இவ்விழாவில், முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் ஏ.முத்துசாராதா,மாற்று சமரச தீர்வு மைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி, உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்படுகிறது. இயற்கை நமக்கு தீங்கு விளைவிக்கவில்லை, நாம் தான் இயற்கையை பாதுகாக்கத் தவறிவிட்டோம்.
இயற்கை இனங்களை அழித்துவிட்டு தினங்களை கொண்டாடி வருகிறோம். இயற்கையை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இவ்விழாவில், கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ.கே.மெகபூப் அலிகான், குடும்ப நல நீதிபதி ஜி.விஜயகுமார், எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிபதி ஏ.முரளிதரன், போக்சோ(POCSO) சிறப்பு நீதிபதி பி.வேல்முருகன், மகிளா நீதிபதி ஜி.சரண், முதன்மை சார்பு நீதிபதி எஸ்.மீனாட்சி, கூடுதல் சார்பு நீதிபதி மற்றும் செயலாளர் (பொறுப்பு) மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வி.தீபா, கூடுதல் சார்பு நீதிபதி எஸ்.சோமசுந்தரம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜி.அருண்குமார், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.ரெங்கராஜ், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் வி.பிரியா, ஜி.ஆனந்தி, கூடுதல் மகிளா நீதித்துறை நடுவர் சௌமியா மேத்யு, வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.